நடிகை ஆல்யா மானசா சின்னத்திரை மூலமாக பிரபலமானவர் விஜய் தொலைக்காட்சி தொடர் ராஜா ராணியில் நடித்து வந்தார்.

– Advertisement –


அதில் செம்பா என்ற பெயரில் வேலை செய்யும் பெண்ணாக வந்த ஆல்யாவுக்கு சஞ்சீவ் ஜோடியாக நடித்தார் அவர் வீட்டின் முதலாளி மகன். பணக்கார வீட்டு பையன் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து கொண்ட பின்பு நடக்கும் பிரச்சனைகள் தான் கதை களம்.

Alya Manasa family

இந்த சீரியல் அதிக விமர்சையாக சென்றதை அடுத்து மக்கள் மத்தியிலும் அதிகமான வரவேற்ய் கிடைத்தது. டி ஆர் பி யும் உச்சத்தில் இருந்தது.

இந்த பழக்கம் கால போக்கில் ஆல்யா மானசா சஞ்சீவ் இடையே காதலாக மாற வெளிப்படையாகவே அவர்களது காதலை அறிவித்து கொண்டனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக எளிமையாக வீட்டிலேயே திருமணம் செய்து கொண்ட ஆல்யா மானாசாவுக்கு அடுத்த ஆண்டே மகள் பிறந்தது.

– Advertisement –


இரண்டு வயதாகும் மகளுக்கு அடுத்து சிறிது இடை வெளிக்கு பின்னர் மீண்டும் ராஜா ராணி 2 சீரியலில் சித்துவுடன் ஜோடியாக நடித்து வருகிறார் ஆல்யா.

சஞ்சீவும் சன் டிவியில் கயல் தொடரில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் ஆல்யா மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து உள்ளார்.

Alya Manasa

இது குறித்து கணவர் சஞ்சீவ் அறிவித்த போது ஆல்யாவுக்கு 3 மாதம் ஆன நிலையில் தற்போது ஐந்தாவது மாதம் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே ஆல்யான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னிடம் கேட்க ஏதேனும் கேள்வி இருந்தால் கேளுங்கள் என பதிவிட்டு இருந்தார்.

– Advertisement –


அதற்கு ரசிகர் ஒருவர் நீங்கள் கர்ப்பவதியாக இருப்பதால் ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகுறீங்களா ? என கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு ஆல்யா மானசா சந்தியா என்றால் ஒன்று தான் அது எப்பவும் இந்த ஆல்யா மானசா தான் என பதில் அளித்து உள்ளார்.

Alya Manasa insta post

மேலும் ஆல்யாவை தொடரில் இருந்து நீக்காமல் அவருக்கு ஏற்றது போல கதை அம்சங்கள் மாற்றபடும் என கூறப்படுகிறது.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: