ஆபாசமாக பதிவுகளை போட்டு வந்த சிக்கா ரவுடி பேபி சூர்யா ஜோடி அதிரடியாக கைது செய்யப்பட்டு கிடுக்குபிடி விசாரணையில் சிக்கியுள்ளனர்.
டிக் டாக் மூலமாக கவர்ச்சி கன்னியாக மாறி நீச்சல் உடை வரை அணிந்து பல ஆயிரகணக்கான பாலோவர்களை பெற்ற சூர்யா டிக்டாக் முடக்கபட்டதை அடுத்து,
![Rowdy Baby Surya Sikka](https://sudesamithran.com/wp-content/uploads/2022/01/Rowdy-Baby-Surya-Sikka-1024x576.jpg)
இன்ஸ்டாகிராம், யூடியூப் என கவனத்தை திருப்ப ரவுடி பேபி சூர்யாவும் அவரது ஆண் நண்பர் சிக்காவும் இணைந்து போட்ட கவர்ச்சி ஆட்டம் காண்பவர்களை முகம் சுழிக்க வைத்தது.
ரவுடி பேபி சூர்யா சிக்கா இணையத்தில் வரம்பு மீறி ஆடுவதை பார்த்த பலரும் மோசமாக வசைப்பாடினாலும் அவர்கள் எதற்க்கும் அஞ்சுவதாக இல்லை.
ஒரு கட்டத்தில் தனக்கு பல முறை அபாஷன் ஆனதாகவும் அதற்க்கு சிக்கா தான் காரணம் எனவும் அவர் தன்னை ஏமாற்றுவதாகவும் லைவில் சூர்யா ஓபனாக பேசினார்.
![Rowdy Baby Surya Sikka](https://sudesamithran.com/wp-content/uploads/2022/01/Rowdy-Baby-Surya-Sikka-Kiss.webp)
இதற்க்கு எதிர்வினையாக சிக்காவும் படு ஆபாசமாக அவரை விமர்சித்தார் இது அளவு மீறி போனதால் கடுப்பான பலர் இவர்கள் மீது புகார் கொடுத்தனர்.
வரம்பு மீறிய ஆபாச விடியோக்களால் அடுத்தடுத்து வந்த புகார்களினால் சூர்யா சிக்கா ஜோடி மதுரையில் வைத்து கைது செய்யபட்டனர்.
இதனை அடுத்து கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தபட்டு உள்ளனர். மேலும் அவர்கள் சிறைக்கு அனுப்பபடலாம் எனவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து மீரா மிதுன், திவ்யா கள்ளச்சி, ஜி பி முத்து என வரிசையாக பல யூடியூபர்கள் காவல்துறை விசாரணைக்காக கைது செய்யபட்டதும் குறிப்பிடத்தக்கது.
[…] ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது ஆண் தோழர் சிக்கா சில தினங்களுக்கு முன்னர், இணையதள வாசி இருவர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யபட்டர். […]