வட மாநில பெண் ஒருவர் திருமணமான ஒரே வாரத்தில் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளாது.

திருமணம் என்றால் முன்பெல்லாம் 100 க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு, சம்மந்தபட்டவர்கள் குறித்து தீர விசாரித்த பிறகு தான் முடிவு எடுப்பார்கள்.

ஆனால் தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என தொழில்நுட்ப வசதிமள் பெருக தேவையற்ற சகவாசங்களும் தற்போது அதிகரித்து வருகிறது.

– Advertisement –


பிகார் மாநிலம் சமாஸ் பகுதியை சேர்ந்தவ இளம் பெண் ஒருவருக்கும் அதே ஊரை சேர்ந்த மற்றொரு நபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

பெரியவர்கள் முடிவு செய்து கோலாகலமாக கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இருவருக்கும் நல்ல படியால திருமணம் உறவினர்கள் முன்பாக நடந்தது.

இதனை அடுத்து 4 நாட்களாக கணவருடனும், கணவர் வீட்டாருடனும் நல்ல விதமாக சந்தோஷமாக இருந்து வந்துள்ளார் மணப் பெண்.

இந்த நிலையில் தான் 5வது நாள் மணமகள் கணவன் வீட்டில் எங்கு தேடியும் இல்லை என்ற பதட்டத்தில் விஷயத்தை பெண் வீட்டாருக்கு தெரிவித்து இருந்தனர்.

– Advertisement –


இதனை அடுத்து மணமகன் வீட்டார்கள் சுதாரித்து பார்த்த போது தான் மணமகள் சீதனமாக கொண்டு வந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பாத்திரங்கள் காணவில்லை.

இதனால் பதறிப் போன மணமகன் வீட்டினரும், பெண் வீட்டாரும் காவல் துறையை அணுகி இது குறித்து வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இதற்கிடையில் மணமகளுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும் அவ மாமன் மகனுடன் தான் ஓட்டம் பிடித்து இருப்பார் எனவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்து இருக்கின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: