கொரானா காலகட்டத்தில் திருமணத்திற்க்கு அதிகபடியான கெடுபிடிகள் விதிக்கபடுவதால் பலரது கல்யாணங்கல் சிம்பிளாக நடக்கிறது.
இதில் சினிமா பிரபலங்கள் விதி விலக்கு அல்ல அந்த வகையில் இந்த ஊரடங்கில் ராணா, ஆனந்தி, ஆரவ், மஹத், ஸ்ரேயா என பலர் திருமணம் செய்து உள்ளனர்.
இந்த லிஸ்டில் தற்போது லேட்டஸ்டாக இணைந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் சீரியல் நடிகை மற்றும் பிக்பாஸ் புகழ் வாய்ந்த அர்ச்சனா சுசீலன். அர்ச்சனா மலையாள சேனலில் தொகுப்பளினியாக தனது கெரியரை துவங்கி, பிறகு நடன நிக்ழ்ச்சிகள் மூலமாக பிரபலம் அடைந்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி, விஜய் டிவியில் வெளியான மகாராணி என பல சின்னத்திரை தொடர்கள் மூலனாக மக்கள் மனதில் இடம் பிடித்தார் அர்ச்சனா.
இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மலையாளத்தில் பிக்பாஸ் சீசன் 1 ல் கலந்து கொண்டு சக போட்டியாளர்களுக்கு டப் கொடுத்தவர். பிக் பாஸ் க்கு பிறகு இவருக்கு என தனி ரசிகர் கூட்டமே சேர்ந்தது அவரை கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள்.
அவர் தற்போது பிரவீன் நாயக்கர் என்பவரை கரம் பிடித்துள்ளார். இந்த போட்டோ மற்றும் வீடியோகளை வெளியிட்ட அர்ச்சனா.
தான் மிக அதிர்ஷ்டசாலி எனவும் வாழ்த்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தும் பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதற்க்கு ரசிகர்கள் பலரும் அர்ச்சனா மற்றும் பிரவீன் ஜோடிக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.