நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்து கொள்வதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், 18 வருடம் காதலர்களாக, நண்பர்களாக, பெற்றோர்கள் என வாழ்ந்து விட்டோம். அடுத்தகட்டமாக நாங்கள் எங்களுக்காக வாழ விரும்புகிறோம், எங்களுக்காக பிரிகிறோம், இதில் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் இது எங்க பர்சனல் என பதிவு போட்டிருந்தார்.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அதிருப்திதையும் அதிகரித்தது. இதில் பலர் அவர்களுக்கான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தனுஷின் தனிபட்ட ஒழுக்கமும் கேள்விக்கு உள்ளாகி வருகிறது.

இதனை பார்த்த தளபதியின் அப்பாவும், இயக்கருமான எஸ்ஏ சந்திரசேகர் காலையில் தனுஷ் ஐஸ்வர்யா செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். யாருக்காவது இந்த நிலை வந்தாலே நானும் ஷோபாவும் அவர்களை தேடி பிடித்து சேர்த்து சந்தோஷமாக வாழ வைப்போம்.

தற்போது எங்களுக்க்ய் தெரிந்த குடும்பத்திலேயே இப்படி நடப்பது மிகுந்த வேதனையாக இருப்பத்காகவும், அவர்களுக்கு அறிவுரை கூற ஆன் பெரிய ஆள் இல்லை.

இருந்தாலும் இது பொய்யான செய்திதாக இருக்க கூடாதா என மனம் ஆசைப்படுவத்காகவும் தெரிவித்த எஸ்ஏசி.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் என்ற கண்ணதாசன் பாடலை மேற்க்கோளிட்டு காட்டி வீடியோ வெளியிட்டு உள்ளார்.

Categorized in: