டிக் டாக் யூடியூபர் என ஆபாசமாக வீடியோ பதிவிட்டு வந்த ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது காதலர் சிக்கந்தர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது.
– Advertisement –
டிக் டாக் மூலமாக கவர்ச்சி கன்னியாக மாறி நீச்சல் உடை வரை அணிந்து பல ஆயிரகணக்கான பாலோவர்களை பெற்ற சூர்யா டிக் டாக் முடக்கபட்டதை அடுத்து,
இன்ஸ்டாகிராம், யூடியூப் என கவனத்தை திருப்ப ரவுடி பேபி சூர்யாவும் அவரது ஆண் நண்பர் சிக்காவும் இணைந்து போட்ட கவர்ச்சி ஆட்டம் காண்பவர்களை முகம் சுழிக்க வைத்தது.

அவர்கள் இணையத்தில் வரம்பு மீறி ஆடுவதை பார்த்த பலரும் மோசமாக வசைப்பாடினாலும் அவர்கள் எதற்க்கும் அஞ்சுவதாக இல்லை.
ஒரு கட்டத்தில் தனக்கு பல முறை அபாஷன் ஆனதாகவும் அதற்க்கு சிக்கா தான் காரணம் எனவும் அவர் தன்னை ஏமாற்றுவதாகவும் லைவில் சூர்யா ஓபனாக பேசினார்.
– Advertisement –
இதற்க்கு எதிர்வினையாக சிக்காவும் படு ஆபாசமாக அவரை விமர்சித்தார் இது அளவு மீறி போனதால் கடுப்பான பலர் இவர்கள் மீது புகார் கொடுத்தனர்.
வரம்பு மீறிய ஆபாச விடியோக்களால் சென்னை ஜெனிபர் என்பவர் உட்பட அடுத்தடுத்து வந்த புகார்களினால் ரவுடி பேபி சூர்யா சிக்கா ஜோடி மதுரையில் வைத்து கைது செய்யபட்டனர்.

இதனை தொடர்ந்தும் அவர்கள் மீது மக்கள் பலர் அதிருப்தியை புகார்களின் மூலமாக தெரியபடுத்திய காரணத்தினால் கோவை காவல் கண்காணிப்பு ஆய்வாளர் அறிவுறுத்தலின்படி மாவட்ட கலெக்டர் அதிரடியாக குண்டாஸ் சட்டத்தில் கொண்டு வந்துள்ளனர்.
– Advertisement –