திருமணம் என்றாலே ஆயிரம் காலத்து பயிர் என பெரியவர்கள் சொல்வதை கேட்டு இருப்போம். தற்போது வரை திருமண முறைகள், மாதங்கள் வேறுபட்டாலும் திருமணம் என்றால் அடிப்படை இருவர் ஒருவராக வாழ்வது தான்.

– Advertisement –


காதல் திருமணம், நிச்சயித்த திருமணம், ஜாதி மறுப்பு கல்யாணம் என பலவிதமாக திருமண நடந்தாலும் எல்லாவற்றிலும் சர்ச்சைகள் சண்டைகள் இருக்க தான் செய்யும்.

ஆனால் இங்கு திருமணத்திற்கு முன்பாகவே சண்டை பெருசாகி மணமகன் கல்யாணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்ப்படுத்தியது.

பீகாரில் பூர்ணியா மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மணக்கோலத்தில் வந்த மணமகன் மற்றும் அவரது உறவினர்களுக்கு விருந்து போடவில்லையாம்.

– Advertisement –


குறித்த நேரத்திற்க்குள்ளாக விருந்து சாப்பாடு தயாராகாத நிலையில் மணமகன் கல்யாண மேடையில் இருந்து கோவித்து கொண்டு வெளியேறியுள்ளனர்.

அவர் கோபமாக வெளியேறி ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிட்ட பிறகு அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட்டாராம்.

marriage fraud

அவருடன் அவரது உறவினர்கள் கூட கிளம்பிவிட செய்வது அறியாமல் பெண் வீட்டார் திகைத்து நின்று இருக்கின்றனர். மேலும் திருமண ஏற்ப்பாடுகளுக்கு உண்டான செலவையும் மணமகன் வீட்டினர் செட்டில் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

கொரானா காலகட்டத்தில் பொண்ணு கிடைக்கிறதே கஷ்டம் இதில் வந்த பெண்ணையும் இப்படி மிஸ் பட்டிங்களே என ஒரு பக்கம் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Follow us on Google News 
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் கிளிக் செய்யவும்.

Google News

Categorized in: